Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான 2 டிஜி மருந்தை புதுச்சேரிக்கு கொண்டு வந்தார் ஆளுநர் தமிழிசை

மே 26, 2021 11:35

புதுச்சேரி: விமானம் மூலம் புதுச்சேரிக்கு நேற்று வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, ஹைதராபாத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய முகக்கவசங்கள், கவச உடைகள், பிராண வாயு செறிவூட்டிகள் கிருமிநாசினி ஆகிய பொருட்களை எடுத்து வந்தார். அதை சுகாதாரத்துறையிடம் வழங்கினார். அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

தெலங்கானாவில் 10 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியேற்புக்கு ஒப்புதல் தர சென்றி ருந்தேன். தெலங்கானாவுக்கும், புதுச்சேரிக்கும் கரோனா பணிக்காக பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் பெற்றேன். தெலங்கானாவுக்கு தரும்போது புதுச்சேரிக்கும் தர கோரினேன். ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் 2டிஜி மருந்து பரிசோதனைக்கு கொண்டு வந்துள்ளேன். 10 நாட்களுக்கு தரப்படும் இந்த மருந்தைசாப்பிட்டால் நான்காவது நாளி லேயே ஆக்சிஜன் வெண்டிலேட்டர் துணையின்றி சுவாசிக்க இயலும். புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் இம்மருந்து கிடைக்கும்.

தெலங்கானா வாழ் ஹரியானா மக்கள் தெலங்கானா செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடை தந்தனர். புதுச்சேரிக்கும் தரக்கோரினேன். புதுச்சேரி செஞ்சிலுவை சங்கத் துக்கு ரூ. 5 லட்சம் அளித்துள்ளனர். ஸ்புட்னிக் தயாரிக்கும் ரெட்டிஸ் ஆய்வகம் 3 இடங்களில் தெலங்கானாவில் உற்பத்தி செய்ய உள்ளனர். புதுச்சேரியில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவக் கோரினேன். முயற்சி செய்வதாக கூறியுள்ளார்கள். தடுப்பூசி மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்தும். இதுபற்றி முதல்வரிடம் விவாதிக்க உள்ளேன். புதுச்சேரி அரசுடன் இணைந்து கரோனா கட்டுப்பாட்டு, மாநில வளர்ச்சி ஆகியவற்றிலும் எனது பங்கு இருக்கும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குறையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம். பிபிஇ கிட் தரம் குறைந்ததாக இருப்பதாக தகவல் வந்தது, குறை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரி செய்யப்படும். வெளியே சொல்வதை விட, ஆய்வுக்கு சென்றிருந்த போதே என்னிடம் செவிலியர்கள் சொல்லியிருக்கலாம். அரசை களங்கப்படுத்துவதை விட களத்தில் இருக்கும் அதிகாரியிடம் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்